Ad Code

Recent Posts

மாவீரர் நாள் கையேடு -01


இதயக்கோயிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்

எமது வீர விடுதலை வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டிருக்கின்றது இவர்களது இறப்புக்கள் அர்த்தமற்ற இழப்புக்கள் அல்ல, இந்த வீரர்களின் சாவுகள் எமது சரித்திரத்தையே இயக்கும் உந்துசக்தியாக, போராட்டத்தின் எமது உயிர் மூச்சாக, எமது போராளிகளின் உறுதிக்கு உத்வேகமளிக்கும் ஊக்கு சக்தியாக அமைந்துவிட்டன. இந்த மாவீரர்கள் காலத்தால் சாகாதவர்கள். சுதந்திரச் சிற்பிகள் எமது மண்ணிலே ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள் எமது இனத்தின் சுதந்திரத்திற்காக, கௌரவத்திற்காக, பாதுகாப்பிற்காக தமது இன்னுயிரை ஈர்ந்துள்ள இந்த மகத்தான தற்கொடையாளர்கள். (தியாகிகள்) காலம் காலமாக எமது இதயக் கோயிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்

ஒரு விடுதலை வீரன் சாதாரண வாழ்க்கையை வாழும் ஒரு சாதாரண மனிதப்பிறவி அல்ல. அவன் ஓர் இலட்சிய வாதி. ஓர் உயரிய இலட்சியத்திற்காக வாழ்பவன் தனக்காக வாழாமல் மற்றவர்களுக்காக வாழ்பவன். மற்றவர்களின் விடிவுக்காக,விமோசனத்திற்காக வாழ்பவன். சுயநலமற்ற, பற்றற்ற அவனது வாழ்க்கை உன்னதமானது. அர்த்த முள்ளது. சுதந்திரம் என்ற உன்னத இலட்சியத்திற்காக அவன் தனது உயிரையும் அர்ப்பணிக்கத் துணிகிறான். எனவே, விடுதலை வீரர்கள் அபூர்வமான மனிதப் பிறவிகள்,அசாதாரணமான பிறவிகள்.

''புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
வே. பிரபாகரன்
தலைவர் தமிழீழ விடுதலைப் புலிகள்

விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code