தேவசிகாமணி விஜயகுமாரி
வல்வெட்டித்துறை - யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 12.09.1976
வீரச்சாவு: 27.05.1997.
நிகழ்வு: 27.05.1997 அன்று முல்லை கடற்பரப்பில் தவறுதலாக ஏற்பட்ட படகு விபத்தின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்
கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியுடன் இணைந்து 30 கடல்மைல் நீந்தி முடித்தவள். எந்த வேலையையும் மறுக்காமல் செய்யும் விநோதாவை எல்லோருக்கும் பிடிக்கும்.
மண்டைதீவுச்சமர், தரையிறங்குகலம் மீதான தாக்குதல், ஓயாத அலைகள் 01 என சண்டைகளுக்கு சென்று வந்தவளுக்கு ஓயாத அலைகள் ஒன்றில் காலில் பெரிய காயம். ஆனால் படகை விட்டு இறங்காது கடற்சமரில் ஈடுபடுகிறாள்.
இவள் எதிர்பார்த்த அந்த இலக்கு. இலக்கு தந்த மகிழ்ச்சி நீர் கிழித்து ஓடுகிறது வண்டி. பொங்கியெழும் அலையின் வேகத்தில் அலைமடியில் கலந்து போனாள் மேஜர் வினோதா.
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்