தங்கராஜா தியாகராசா
களுதாவளை ~மட்டக்களப்பு
வீரப்பிறப்பு: 27.03.1973
வீரச்சாவு: 27.05.1997
நிகழ்வு: 27.05.1997 அன்று முல்லை கடற்பரப்பில் தவறுதலாக ஏற்பட்ட படகு விபத்தின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.
மக்களுக்காக தன்னை அர்பணிக்க வேண்டும் எப்போது இவனது கனவு இதுதான்.
கடற்புலிகள் அணியில் பயிற்சிகளை நிறைவு செய்த இவன் நல்ல நீச்சல்காரன். தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, ஆயுதங்களின் தேர்ச்சி, படகோட்டி என இவனது நிலைகள் விரியும்.
எந்தச் சண்டையிலும் எந்த நிலையிலும் செல்லக்கூடிய வல்லமை இவனுக்கு உண்டு. இவனது கனவுகளுக்கான காலம் கனிந்தது. காத்திருப்பு நிறைந்த காலங்கள் கரைந்தது. அந்த நாளும் வந்தது. கரையிருந்து நகர்கிறது கந்தகப் படகு கூடவே கையசைத்து நகர்கிறாள் சந்திரா.
இலட்சியத்தில் உயர்ந்த இவர்கள் இலக்கினை அடைய முன்பே கடல்த் தாயின் தாலாட்டில் உறங்கிப்போயினர்.
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்