பாலசிங்கம் சித்ரூபன்
சுழிபுரம் - யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 10.01.1969
வீரச்சாவு: 27.05.1997.
நிகழ்வு: 27.05.1997 அன்று முல்லை கடற்பரப்பில் தவறுதலாக ஏற்பட்ட படகு விபத்தின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்
மக்கள் மத்தியில் தன் அரசியல் பணிமூலம் பிரபல்யமானவன். மற்றவர்களின் துன்பங்களை எல்லாம் தனதாக்கி கவலைப்படும் சித்தாவின் மனதில் தான் கரும்புலியாகச் சென்று மக்களுக்கு விடிவை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற பேரவா அவனை கடற்கரும்புலியாக மாற்றுகிறது.
பிறப்பிலே இயலாத கால் என்றாலும் எல்லாப் பயிற்சிகளையும் திறம்படச் செய்கிறான். கலகலப்பு குறும்புத்தனமெல்லாவற்றையும் தன்னகத்தே கொண்டவன் தன் இறுதி இலட்சியத்திற்காக காத்திருக்கிறான். அந்த நாள் வழமையான கலகலப்புடன் விடைபெற்றுப் போகிறது.
இலட்சியத்தில் உயர்ந்த இவர்கள் இலக்கினை அடைய முன்பே கடல்த் தாயின் தாலாட்டில் உறங்கிப்போயினர்.
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்