தம்புசெபஸ்ரியன் மரியகொறட்டி
குருநகர் - யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 19.02.1975
வீரச்சாவு: 27.05.1997.
நிகழ்வு: 27.05.1997 அன்று முல்லை கடற்பரப்பில் தவறுதலாக ஏற்பட்ட படகு விபத்தின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.
என்ற தம்பியை சுட்டவனை நான் சுடாமல் விடமாட்டேன் என சொல்லிச் சொல்லியே தனது 50 கலிபர் துப்பாக்கியை இயக்குவாள் சந்திரா.
இயக்கத்திற்கு வரும்முன்பே இவள் நிச்ச்சலில் கெட்டிக்காரி. இவளின் நீச்சல் திறமை நீச்சல் பயிற்சி ஆசிரியராக மாற்றுகிறது. ஆரம்ப காலத்தில் கிளாலி கடல் நீரேரியில் மக்களுக்கான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட இவள் பின்னாளில் சுகன்யா தாக்குதல் அணியில் செயற்படுகிறாள்.
இந்தக் காலப் பகுதியில் கடலுக்கு சென்ற அவளது தம்பி திரும்பி வரவேயில்லை. சிறிலங்கா கடற்படையின் கோரப்பசிக்கு பலியான மீனவர்களில் அவனும் ஒருவனான போதும் சந்திராவினால் பொறுக்கமுடியவில்லை. அந்தக் கடலரக்கனுக்கு என்ற இடியன் பதில் சொல்லும் அந்த ஓர்மம் அவளைக் கரும்புலியாக மாற்றியது.
இலட்சியத்தை வரித்துக்கொண்ட அவள் தன் இலக்கிற்கு செல்ல முன்பே பேரிடியில் அவளும் கடல்மடியில் கலந்துபோனாள்.
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்