Ad Code

Recent Posts

வேவுப்புலி மேஐர் சேரன் / அசோகின் வீர வரலாற்று நினைவுகள்

வேவுப்புலி மேஐர் ஆசோக்/சேரன் 

குணசிங்கம் குணராஜ் 

தமிழீழம்:யாழ்மாவட்டம் 

தாய் மடியில் : 30.07.1975

தாயக மடியில் : 02.08.1994


1990 ம் ஆண்டு இயக்கத்தில் இணைந்த அசோக் பயிற்சியின் பின் வலிகாமப் பகுதியில் நின்று பல்வேறு களம் கண்ட ஒரு வீரனாவான் கந்தையாவைப் போலவே இவனும் பலாலிக்கான ஒரு வேவுக்காரன். ஆனால் இவனோ வலிகாமப் பகுதியிலிருந்து தனது வேவு நடவடிக்கையை ஆரம்பித்தான்.


ஒவ்வொருமுறை வேவு நடவடிக்கையின் போதும் இவனது தூரம் அதிகரித்துக் கொண்டபோனது. (அதிலும் ஒரு ஆனந்தம் ஏனெனில் தான் ஓடித்திரிந்து விளையாடிய தான் படித்த பாடசாலை இவைகளை சக போராளிகளுடன் பகிர்ந்து கொண்டதுடன், குறைந்தளவு போராளிகளுடன் எதிரிக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்துவது) எதிரியின் ஆக்கிரமிப்புத்தான் இதற்க்கு காரணம்.





அந்தநேரம் எம்மிடம் எதிரியின் போர் விமானங்களையோ போர் உலங்குவானுர்திகளையோ சுட்டு வீழ்த்துவதற்க்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகளோ விமான எதிர்ப்பு ஆயதங்களோ இருக்கவில்லை. எம்மிடம் இருந்த மிகப் பலம் வாய்ந்த ஆயுதமான உயிராயுதம் அதாவது கரும்புலிகள். இவர்களைப் பயன்படுத்தி ஒரு பெரும்தாக்குதலுக்குத் திட்டம் தீட்டப்பட்டது. 


அதாவது எமது மக்களினதும் போராளிகளினதும் சாவுக்குக் காரணமான விமானங்களை அதன் இருப்பிடம் தேடிச் சென்று அழிப்பதே திட்டமாகும் .இது இலகுவான காரியமல்ல எத்தனையோ இராணுவ காவலரன்கள் இராணுவ ரோந்துகள் இராணுவ மினிமுகாம்கள் இவைகளை மிகவும் அவதானத்துடன் செல்லவேண்டும்.


அதே நேரம் சின்னத் தவறாகிலும் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் அதேவேளை எதிரியும் உசாராகிவிடுவான் சிறுகச் சிறுக சேர்த்த அசோக் தலைமையிலான அணியின் வேவுத்தகவலின் அடிப்படையில் பலாலி விமான நிலையம் மீது ஒரு தாக்குதல் மேற்கொள்வதற்கான திட்டம் தீட்டப்பட்டு அணிகள் புறப்பட்டு சென்று கொண்டிருக்கையில் எதிர்பாராத விதமாக இராணுவத்தூடனான நேரடி மோதலில் பல வெற்றிகளுக்கு வேவுத்தகவல்களை மிகத் துல்லியமாக பெற்றுத்தந்த மேஐர் அசோக் 02.08.19994 அன்று வீரச்சாவடைந்தார். 

இருப்பினும் இவர் கூட்டச் சென்ற கரும்புலிகள் தமது இலக்கை வெற்றிகரமாக அழித்து வீரச்சாவடைந்தனர்.


அசோக்கின் சகோதரி 26.06.2000 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வெடிமருந்து ஏற்றிச் சென்ற உகண கப்பலை மூழ்கடித்து வீரச்சாவடைந்த கடற்கரும்புலி மேஐர் சந்தனா ஆகும்.



தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த
அண்ணன்,தங்கை ஊர்ச் வீரமறவர்களிற்கு எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments


 

Ad Code