Ad Code

Recent Posts

கப்டன் ரமணி (தேன்மொழி) வீர வரலாற்று நினைவுகள்

கப்டன் ரமணி (தேன்மொழி)

முத்துலிங்கம் சுதாகு 

வெல்லாவெளி, மட்டக்களப்பு

வீரப்பிறப்பு: 28.12.1975  

வீரச்சாவு: 28.07.1995


நிகழ்வு: மணலாறுக் கோட்டத்தில் ஐந்து பாரிய படைமுகாம்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு


கப்டன் தேன்மொழி


1990ம் ஆண்டின் ஆரம்பத்தில், மட்டு நகரிலிருந்து கடல் கடந்து யாழ்ப்பாணம் வந்து, விடுதலைப் புலிகள் மகளிர் படையணியின் ஒன்பதாவது பயிற்சிப் பாசறையில் அவள் பயிற்சி எடுத்தாள்.


அவள் சரியான துடியாட்டம் குழந்தைத்தனம் மாறாத குழப்படியும் கூட. சண்டையென்றால் துள்ளிக் கொண்டு திரியும் அவளின் ஆசை போல. நிறையக் களங்களைச் சந்திக்கும் வாய்ப்பு அவளுக்குக் கிடைத்தது.


மாங்குளத்தின் வெற்றியிலும் ஆனையிறவுச் சண்டை உலகுக்கு உணர்த்திய போர்முறையிலும், இன்னும் 'மின்னல்' சிலாவத்துறை, பத்தைமேனி, கட்டைக்காடு, என நீண்டு கொண்டே போகும் கள வரலாற்றிலும் அவளது சுவடுகள் ஆழப் பதிந்திருக்கின்றன. நீண்ட வெற்றிகளுக்குப் பின்னால் ஆழமான படிப்பினைகளுக்குப் பின்னால், அவற்றையெல்லாம் எமக்குத் தந்துவிட்டுச் சென்ற மாவீரர்களின் வரலாறும் அவர்களின் உறுதியும்..


அவர்களில் எங்கள் தேன்மொழியும்.


அவளது கதை பெரியது. யாரிடமும் தேடிப் பொறுக்கி எடுத்தால் அது நீண்டவரலாறு. மட்டக்களப்பில் எழுந்த புயல். 1995.07.28 அன்று கொக்குத்தொடுவாயின் மறக்க முடியாத கள வரலாற்றில் உறங்கிப் போன கடைசி நிமிடம் வரை அவளது கதையும் கனவும் நீண்டவை. புலோப்பளையில் யாழ்தேவி புரண்ட வரலாற்றிலும், மண்கிண்டி மலை எம்வசம் ஆன கதையிலும் இன்னும் பூநகரிக்கடல், தரைகள் 'புலிகளினது' 6763 பொறிக்கப்பட்ட பெயர் களங்களிலும் அவளது துப்பாக்கி, ரவைகளைப் பொழிந்தன.


சண்டையில் திறமையாகச் செயற்பட்டதற்காகப் பாராட்டுக்களையும் திறமைப் பரிசையும் பெற்றாள். ஆனையிறவு, இயக்கச்சிப் பகுதியில் இராணுவத்தினர் நிலை கொண்டிருந்த போது. அணித்தலைவிகளுக்குப் பயிற்சிகளும் வகுப்புகளும் நடாத்தப்பட்டன. அதில் தேன்மொழியும் கலந்து கொண்டாள். அங்கு நடந்த சண்டையில் வேவுப் புலியாக நின்று திறமையாகச் செயற்பட்டு, தனது அணிக்கு எதிரியின் முகாமை எப்படி அழிக்கவேண்டும் என்று தெளிவாக விளக்கி. அவர்களைச் சண்டைக்குக் கூட்டிச் சென்றாள். அணியை மீண்டும் உரிய இடத்துக்குச் சரியாகக் கொண்டு போய்ச் சேர்த்தாள்.


சில நாட்களுக்குப் பின் மீண்டும் பயிற்சிகள் நடைபெற்றன. அப்போது பெண் போராளிகளுக்கும் ஆண் போராளிகளுக்கும் இடையில் போட்டிகள் வைக்கப்பட்டன. திசைகாட்டி மூலம் வேறு முகாம் செல்லும் போட்டியில் முதலாவதாக வந்து சேர்ந்தாள். அவளின் பலதரப்பட்ட திறமைகளையும் கண்ட தளபதி அவளைப் பயிற்சி ஆசிரியராக நியமித்தார். குழப்படிக்காரியாக இருந்த தேன்மொழி. இதன் பின்னர் அமைதியானவளாக மாறிவிட்டாள்.


அவளது வீட்டிலிருந்து அவளை விட. அவளது அக்காவும் போராளி. பாச உறவுகளை இயக்கக் கடமைகள் நீண்ட தூரம் பார்க்கமுடியாதவாறு பிரித்தது.


"என்னை நான் பெரிசெண்டு நினைக்கவில்லை என்ரை அக்கா இயக்கத்தின் வேறு பிரிவில் இருப்பதால் நான் பார்க்கவில்லை. என் அக்காவின் முகம் எனக்கு நினைவில் இல்லை. அதை நான் பெரிசுபடுத்தவில்லை. என்ர அக்கா போராட்டத்துக்கு வந்த பின்னர் செய்தது எனக்குத் தெரியாது. ஆனால் என்ரை ஒவ்வொரு செயலும் அவளுக்குத் தெரியும், அவளைக் கண்டால் சொல்லுங்கள்" என்று புலோப்பளைச் சண்டைக்குச் சென்ற போது சொல்லிவிட்டுப் போனாள்.


இறுதியாகக் கொக்குத்தொடுவாய்ச் சண்டையின் போது இறுதிவரை நின்று சண்டை பிடித்தாள். தனது அணியைப் பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்திக் கொண்டிருந்த போது. அவளது கையில் எதிரியின் ரவை தாக்கியது. எறிகணைகள் மழை போல் வீழ்ந்தன . ஒற்றைக் கையோடு நின்று,


என்னைக் கவனிக்க வேண்டாம். எல்லோரும் போங்கோ..."


என்று சொல்லிக் கொண்டிருந்த போது மீண்டும் எதிரியின் எறிகணைகள் விழுந்தன. அந்தச் சண்டையில் நாங்கள் ஏராளமான போராளிகளை இழந்தோம். தேன்மொழி உட்பட அம்மா..!


நம் தேசத்தின் எல்லைக் கோடுகள் இரத்த வரிகளால் கோடிடப்பட்டுக் கொண்டிருக்கும்போது, நீ மட்டும் ஏனம்மா கண்ணீர் வரிகளால் உன் கன்னங்களைக் கோலமிடுகிறாய்."


இது, தேன்மொழியின் நாட்குறிப்பேட்டிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி.



விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! 
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments


 

Ad Code